இந்த ஆண்டின் தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவிற்கு 438 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழு அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதேவேளை, ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 218 முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் 220 முறைப்பாடுகளை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.