உதவி மருத்துவர்கள், தாதியர் பணியார்கள், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியார்கள் ஆகியேர் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் 22ஆம் திகதி அவர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
புஞ்சி பொரளையில் அமைந்துள்ள அரச தாதியர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணியாளர்களின் ஒன்றிணையத்தின் இணைப்பாளர் சமன் தேசப்பிரிய இதனை அறிவித்தார்.