நாட்டின் பல பாகங்களில் இன்று(22) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமிற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் , இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.