இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(23) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன் இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பிலும் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, டெல்லியில் இடம்பெறும் ஐந்தாவது உலக சைபர் விண்வெளி மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ள உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.