ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை…

2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட 6 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்கவினால் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.டன், அதனை 12 வருடங்களாக ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் தலா 32000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.