ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டம் இன்று…

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று(27) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அத்துடன் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு கட்சி எவ்வாறு முகம்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.