அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கும் கிடைக்கும் வாய்ப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரத்துச் செய்யப்பட்டிருந்த அமெரிக்காவின் வர்த்தக சலுகையான ஜி.எஸ்.பி மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதற்கான உறுதியை அமெரிக்கா அளித்துள்ளது.

இதன்படி இந்த சலுகை இம்மாதம்  29ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்று பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சலுகையின் மூலம் இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(riz)