யாழில் பல பகுதிகளில், ஹெரோயின் கலந்த டொபிக்களை விற்பனை செய்த இருவர் நேற்று(28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமது பயணப் பையில் மறைத்து குறித்த டொபிக்களை இவர்கள் விற்பனை செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து ஹெரோயின் கலந்த 50 டொபிக்கள் வரை கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை இன்று(29) யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.