உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி இன்று முதல்..

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி இன்று(11) ஆரம்பிக்கப்படவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

இதற்கான கால எல்லை எதிர்வரும் 15ம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது. குறித்த இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதா இல்லையா என தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

 

#reeshmmaa..