இன்று(12) முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றன.
இந்நிலையில், குறித்த நேரத்திற்கு முன்னதாகவே பரிட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சாதாரண தர மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, பணிப் புறக்கணிப்பை கைவிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.