நிவ்யோர்க் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை..

நிவ்யோர்க் – மன்ஹட்டான் நகரில் இன்று(12) காலை ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் மன்ஹட்டான் டைம்ஸ் சதுக்கத்திற்கு முன்னால் அமைந்துள்ள துறைமுக பஸ் நிலையத்திலேயே ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக இது வரை எது வித தகவல்களும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshmaa..