ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து ஆராய அமைச்சரவை குழு…

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8ம் திகதி முதல் ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சில பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.