நைஜீரியாவில் வடகிழக்கில் உள்ள பொடிஸ்கும் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. தேவாலயத்துக்குள் போஹோஹரம் தற்கொலை படை தீவிரவாதி புகுந்தான். அங்கு தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தான்.
அப்போது அந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியார், ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.
(riz)