இலங்கையில் முதன்முறையாக சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய இலத்திரனியல் சிகரட் தொகையொன்றுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்ட கலால் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றில் நேற்று(12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் வௌியாகியிருந்த அறிவிப்புக்கு அமைய குறித்த இலத்திரனியல் சிகரட் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.