ப்ரக்யாவின் நோய் நிலைமை மோசமாகிறது..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை நாடக தொடர்களில் ஒன்றுதான் இனிய இருமலர்கள் தொடர் நாடகம். இது இலங்கையிலும் சிங்கள மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றது.

குறித்த இந்த தொடர் நாடகம் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அதற்கு காரணம் அந்த தொடர் நாடகத்தில் நடிக்கும் பிரக்யா.

தமிழ், சிங்களம் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரக்யா பேட்டி ஒன்று அளித்தார். அதில் , தனக்கு காசநோய் இருப்பதாக் கூறியுள்ளார்.

தனக்கு நோய் இருந்தும் ஓய்வு எடுக்காமல் அவர் தொடர்ந்து நாடக தொடர்களில் நடித்து வருகிறார்.

மேலும் நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகி கொண்டே போவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் அவரை நினைத்து வருந்துவதோடு அவர் நடிக்க வில்லை என்றால் குறித்த நாடகத்தை பார்க்க மாட்டோம் என கூறி வருகின்றனர்.

 

#####