இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான தீர்மானமிக்க ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று(17) விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.
குறித்த இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், தொடரின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#reeshmmaa..