இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க பதவி ஏற்ற பின்னர் இலங்கை அணி முன்னேற்றகர நிலைக்கு செல்லும் இலங்கை அணியின் தேர்வுக் குழுப் பிரதானி ஜெரோம் லெப்ரோய் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது வருகை இலங்கை அணியை சீர்செய்யும் எனவும் துடுப்பாட்டத்தில் இலங்கை அணி மேலும் வலுப்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் இடம்பெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில், இலங்கை அணியில் சிறிய அளவிலான முன்னேற்றத்தை கண்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் ஜெரோம் லெப்ரோய் குறிப்பிட்டார்.
#reeshmAAA