இலங்கையில் தடுப்பில் உள்ள மேலும் 70 இந்திய மீனவர்கள் எதிர்வரும் தினங்களில் விடுவிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வருடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் 150க்கும் அதிகமான இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் 89 பேர் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 70 பேரும் எதிர்வரும் தினங்களில் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.