பம்பலப்பிட்டியில் வர்த்தக நிலையம் முற்றாக தீக்கிரை..

பம்பலப்பிட்டி – டுப்பளிகேசன் வீதியிலுள்ள வர்த்தக நிலையம் நேற்று(01) இரவு தீயினால் சேதமடைந்துள்ளது.

பம்பலபிட்டி பொலிஸார், கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு, தீயினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#reeshmaa..