பிணை முறி அறிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பு..

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் ஊடகங்களுக்கு விசேட அறிவித்தலொன்று விடுக்கப்படவுள்ளது.

நாளை(03) ஜனாதிபதி ஊடகங்களுக்கு குறித்த விசேட அறிவித்தலை விடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#r