யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முதலாவது சந்தேக நபர் பூபாலசிங்கம் இந்தரகுமார், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நேற்று(03) ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வித்தியா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போது காவல்துறை அதிகாரியொருவரை திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma