ஹம்பாந்தைதோட்டை மாகம்புர துறைமுகத்தில் கடமையாற்றிய சுமார் 438 பேர் பலவந்தமாக கடமையிலிருந்து நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் முன்னால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் இன்று(09) காலை முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கும் வரை தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.