நாட்டின் பல பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மறறும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிமான காற்று வீசக்கூடும் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் எதிர்வரும் நாட்களில் காலைவேளைகளில் உறைபனி நிலவக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு , சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என்று இன்று(16) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.