கல்முனையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று(16) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை நகரில் தனியார் பஸ் நிலையத்தை ஏற்படுத்தி தருமாறும், இணைந்த சேவையை உறுதிப்படுத்துமாறும் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை நகரிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.