டெங்கு நோய் அதிகம் பரவும் பகுதிகளை இனங்கண்டு, இன்று(17) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.