சிம்பாப்வே அணியிடம் தோற்றது இலங்கை அணி…

பங்களாதேஸில் நடைபெறும் மும்முனை ஒருநாள் கிரிக்கட் தொடரில், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில்  சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

சிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது

இந்நிலையில, 291 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதன்படி , சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

திசர பெரேரா 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டென்டை சடாரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

 

\reeshma