கொட்டாஞ்சேனை – அளுத் மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்தி வரையான வீதி இன்று இரவு 9.00 மணி முதல் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை முழுமையாக மூடப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த வீதியில் புதிய நீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை இடம்பெறுவதால் இவ்வாறு குறித்த வீதி மூடப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை, சாரதிகளிடம் கோரியுள்ளது.
#reeshma..