யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட மாணவர்கள் நான்கு பேரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 ஆம் வருட மாணவர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மாணவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்களது சார்பில் ஆஜரான சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார். எனினும், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், நீதவான் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.