டெங்கு நோயினால் 4000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு…

கடந்த 22 நாட்களில் டெங்கு நோயினால் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, குறித்த காலப்பகுதியில் 4 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பிலும் அதிக டெங்கு நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.