பேருவளையில் மொட்டு வெற்றி பெறுவது உறுதியே.. – மஹிந்த ராஜபக்ஷ

முஸ்லிம்கள் செறிந்து வாழும் பேருவளையையும் நாமே வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

முஸ்லிம்களிடம் பொய்யைக் கூறி அவர்களை தனக்கு எதிராக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவைகள் பொய்யென தற்போது அம்மக்களுக்கு தெளிவாகியுள்ளது. அந்த முஸ்லிம்களே தற்பொழுது தன்னிடம் நேரில் வந்து இனி நாம் ஏமாற மாட்டோம் எனக் கூற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று(25) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

#g-reeshma