2017ல் தோல்பொருள் மற்றும் பாதணி கைத்தொழிலில் பரந்த அபிவிருத்தி…

2017 ஆம் ஆண்டில் இலங்கையின் தோல்பொருள் மற்றும் பாதணி கைத்தொழிலில் பரந்த அபிவிருத்தி ஏற்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த உற்பத்திகளுக்கு சிறந்த ஏற்றுமதிச் சந்தையும் உருவானதாக அமைச்சில் நேற்று(25) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.

2007ல் பாதணி மற்றும் தோற்பொருள் ஏற்றுமதி மூலம் 1848 கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்ததுள்ளது. இந்தத் துறைக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்க தமது அமைச்சு பெரும் பங்களிப்பைவழங்கியதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.