2017 இல் தயாரிக்கப்பட்ட தேயிலை 5 % அதிகரிப்பு…

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் தயாரிக்கப்பட்ட தேயிலை 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் கடந்த காலத்தில் தேயிலைத் தொழிற்துறைக்கு வழங்கிய நிவாரண உதவிகள், பரந்துபட்ட சேவை மற்றும் தேயிலை உற்பத்திக்கான சிறந்த காலநிலையே இதற்கு காரணம் என அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்கவின் தலைமையில் தேயிலை ஏற்றுமதியின் தற்போதைய நிலமை குறித்தும் தொழிற்துறையின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று(25) இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.