நான்கு பிள்ளைகளையும் வெளிநாட்டில் அனுப்பி விட்டு வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் காம லேகியங்கள் விற்றுவந்ததால் பொலிசாரல் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் சுதுமலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுதுமலை தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த குறித்த நபர் மிகுந்த பண வசதிகளுடன் இருந்து 3 வர்த்தகநிலையங்களையும் நடாத்தி வந்தார்.
இந் நிலையில் இவர் வீட்டில் வைத்து போதைவஸ்து சேர்க்கப்பட்ட லேகியத்தையும் விற்றுவந்ததாகத் தெரியவருகின்றது. புத்தளத்தில் இருந்து வரும் சிங்களவர் ஒருவரே இவருக்கு இதனை விநியோகித்து வந்துள்ளார். இவரை மல்லாகம் நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது அவரை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.