எந்த நடிகரையும் புகழாத ஜோதிகா ஜி.வி யை புகழ காரணம் என்ன…

தற்போது ஜோதிகா நாச்சியார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் பாலா. பாலா எடுக்கும் படம் என்றால் அது வேற விதமாக தான் இருக்கும். அந்த வகையில் ஜோதிகா இந்த படத்தின் பெண்களை இழிவு படுத்தும் வார்த்தைகளை பேசி வெளியான இப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பை சந்தித்தது. இருந்தும், படத்திற்கு தேவை அதனால் தான் பேசினேன் என்று கூறினார் ஜோதிகா.

மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ் குறித்து ஒரு பேட்டியில் ஜோதிகா பேசியுள்ளார். அவர் கூறியதாவது: முதல் நாள் படப்பிடிப்பின் போதே ஜி.வி. பிரகாஷ் என்னிடம் எனது இடத்திற்கு வந்து பேசினார். இந்த காலத்தில் இளம் தலைமுறை நடிகர்களிடம் இந்த தன்மை மிக குறைவு, மேலும், ஜி.வியின் அடுத்தக்கட்டத்தை இந்த படத்தில் பார்க்கலாம் என்று கூறினார் ஜோதிகா. அவர் இவ்வாறு எந்த நடிகரையும் புகழ்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.