இவ்வருடத்தில் இதுவரையில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையணி தெரிவித்துள்ளது.
ரயில் பாதைக்குக் குறுக்காக பயணிக்கும் போதும், ரயில்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் படையணி அறிவித்துள்ளது.
இதேவேளை, அண்மையில் அங்குலான பிரதேசத்தில் ரயில் மிதி பலகையில் பயணித்த நான்கு பயணிகள் விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.