குருணாகல், தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் டிபர் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த பேரூந்தில் பயணித்த 24 பேரும் டிபர் வாகனத்தின் சாரதியும் சிகிச்சைக்காக குருணாகல் மற்றும் பொல்கொல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுள் இருவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#rishma