பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இன்று(09) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், கொழும்பில் இருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.