உதயங்கவால் இலங்கை பொலிஸாருக்கு எதிராக சர்வதேச இழப்பீட்டு வழக்கு…

சர்வதேச அளவில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் இண்டர்பொல் சிவப்பு அறிவித்தல் ஒன்று இல்லை என்றும் உறுதியானதையடுத்து தான் சர்வதேச பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அவரது குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“… கடந்த 04ம் திகதி அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்பத்தில் டுபாய் விமான நிலையத்தில் வைத்து சர்வதேச பொலிஸாரால் தான் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தேன்.

இவை அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டதொன்றே.. இலங்கை பொலிஸாருக்கு எதிராக சர்வதேச இழப்பீட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பம் ஒன்று தனக்கு எற்பட்டுள்ளமைக்கு தான் சந்தோசப்படுகிறேன்..”

 

#g/reeshma