தேர்தல் சட்டத்தை மீறிய 07 பேர் கைது…

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்களில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(08) காலை 06.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பாக 09 முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய 05 சம்பவங்கள் இந்தக் காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.