மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம்…

நாட்டின் பல பாகங்களிலும் நீடித்த மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என்று திணைக்களம் இன்று(10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

#rishma…