தேர்தல் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று(10) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினத்தில்(10) தேர்தல் சட்டங்களை மீறிய 39 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்களுள் 8 பேர் வேட்பாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.