நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று(12) பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவில் மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் மற்றைய பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் , இதன் காரணமாக மின்னலாம் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறு என வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.