நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இறுதி சில நாட்களில் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை 80 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளுக்காக பஸ்களை வழங்கியதன் மூலம் அறவிடப்படவேண்டிய தொகை எதிர்வரும் சில தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக சபையின் போக்குவரத்து பொது முகாமையாளர் ஆர்ரி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.