திருகோணமலையின் பிரபல பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று(14) காலை குறித்த களஞ்சியசாலையை சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்ற போதே, குறித்த வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடி படையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.