ஐரோப்பிய சங்கத்தின் பணமோசடி தடுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை விலக்கிக்கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைய செயற்படவுள்ளதாக கொழும்பில் இன்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை , இலங்கை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுக்கிடையில் , மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்தும் மாற்றமின்றி பராமரித்துச் செல்ல நேற்று(14) இடம்பெற்ற மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.