சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று(20) ஆரம்பாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(20) முதல் எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி வரை செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் 174,507 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், பழைய பாடத்திட்டன் கீழ் 5093 ​பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.