சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கு இணைக்கத் தீர்மானம்…

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(21) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் தற்போது கல்வி கற்கும் சுமார் 1000 மாணவர்களின் தகைமைகளைப் பரிசீலித்து, அதற்கமைய கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.