சைட்டம் இரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என அனைத்து பல்கலைகழக ஒன்றியம் தெரிவிப்பு…

சைட்டம் நிறுவன மாணவர்களை கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழத்தின் வைத்திய பீடத்திற்கு மாற்றினாலும், நாம் போராடுவது குறித்த நிறுவனத்தினை இரத்து செய்யுறு கோரியேயாகும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதி ஏற்பாட்டாளர் மங்கள மத்துமகே இன்று(22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

ஆதலால், சைட்டம் நிறுவனத்தினை இரத்து செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிடுமாறும் தற்போது வெளியிடப்பட்டுள்ள குறைந்த தரத்திலான கல்வித்தகமைக்கான வர்த்தமானி அறிவித்தலினை இரத்து செய்யுமாறும் அவர் குறித்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அவ்வாறு செய்யாதவிடத்து சைட்டம் நிறுவனத்திற்கு எதிரான நமது போராட்டங்களும் தொடரும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

#rishma