திருமணத்திற்கு பின் மீண்டும் களமிறங்கும் பாவனா…

கன்னடப் பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலனுமான நவீனை திருமணம் செய்துகொண்ட பாவனா, கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள அவர் கூறியதாவது: இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.

அதுவரை என்னால் காத்திருக்க முடியாது. எனவேதான் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கமர்ஷியல் படங்களிலும் நடிக்கிறேன்.

காதலன் நவீனை திருமணம் செய்துகொண்ட பிறகு என் வாழ்க்கையில் அமைதியும், சந்தோஷமும் மேலும் கூடியிருக்கிறது. முன்பைவிட இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என பாவனா கூறியுள்ளார்.