இத்தாலி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கையர்…

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இத்தாலி சென்று, இத்தாலியின் மிலான் நகரில் வாழ்ந்துவரும் நிரஞ்சன் வாஸ் என்பவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி தேர்தல்  நடைபெறவுள்ளது.

அந்நாட்டின் பிரதான அரசியல் கட்சியாக விளங்கும் ஜனநாயக கட்சி வேட்பாளராக இவர் களமிறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.